tamilnadu

சிவசங்கர் பாபாவிடம் விசாரணை...

சென்னை:
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சுஷில் ஹரி பள்ளியில் வைத்து சிவசங்கர் பாபாவிடம்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா.இவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்தியசி.பி.சி.ஐ.டி. போலீசார், தில்லிக்கு தப்பிஓடி தலைமறைவான  சிவசங்கர் பாபாவைகைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் செவ்வாயன்றுகேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவின் அறையை போலீசார் திறந்தனர்.  அங்கு அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

;