tamilnadu

img

பாதுகாப்பு நெறி முறைகளுடன் துணைத் தேர்வு தொடக்கம்

சென்னை:
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் முதல் தொடங்கியது.

கொரோனா தாக்குதல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இதனால் பெரும்சிரமத்திற்கு ஆளாயினர்.இந்நிலையில், அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் 28 ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 26 ஆம் தேதி வரையும் துணைத்தேர்வு நடைபெறுகிறது.தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, முகக்கவசம் வழங்கி கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் அளிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தனி மனித இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு அறையில் உட்கார வைக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் படிப்பதற்காக காத்திருக்கும் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேர்வு விதிமுறைகள் அடிப்படையில் மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, படிப்பதற்கு 10 நிமிடம் அளிக்கப்பட்டது. இத்தேர்வு காலை 10:15 மணி முதல் பகல் 1:15 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

;