கள்ளக்குறிச்சி,ஜூலை 19- தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தில் 14 லட்சம் மாணவர்கள் பயன டைந்துள்ளனர் என்று இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட் டம், நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், “நான் முதல்வன் திட்டம்” குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்து ரையாடினார். அப்போது,“ திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இரண்டு கண்களாக பார்ப்பது, சுகாதாரம் மற்றும் பள்ளி கல்வித்துறையை தான்” என்றார். ஒவ்வொரு மாணவரும் தனது துறையில் முதல் வனாக திகழ வேண்டும் என்பதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம். இது வரை 14 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், பயிற்சி பெற்ற கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 1,425 மாண வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள் ளது. பள்ளி, கல்லூரி மாண வர்கள் வருங்காலத்தில் தொழில் முனைவோராக வும், தொழில் வல்லுநரா கவும் உருவாகிட இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். இதனைத் தொடர்ந்து, சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 10 மாணவர்களுக்கு திறன் பயிற்சிக்கான சான்றிதழ் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ந.மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன், சட்டமன்றஉறுப்பினர்கள் வசந்தம் க.கார்த்திகேயன், தா.உதயசூரியன், அனைத்து துறை அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.