சென்னை,டிச.12- சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்ப டைக்கப்பட்ட விவகாரம் தொடர் பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளனர். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பிற்காக மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே வேளை யில் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை இறந்தது தெரிய வந்தது. அதன்பின், குழந்தையின் உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என குழந்தை யின் தந்தை வலியுறுத்தியதன் அடிப்படையில் குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்க பட்டது.
குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதை சம்பந்தப்பட்ட ஊழி யர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 பேர் கொண்ட மருத் துவ குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.