tamilnadu

img

சென்னை, கோவை, காஞ்சியில் ரூ.850 கோடியில் தொழில் முதலீடு அமெ.வில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை, செப்.6-  சென்னை, கோவை, காஞ்சி புரம் ஆகிய நகரங்களில் ரூ.850 கோடியில் தொழில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் அமெரிக்காவில் தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். அவரின் அந்த முயற்சி காரணமாக உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜி னியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறு வனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் கையெழுத்தானது.

கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ண றிவு ஆய்வகங்கள் அமைப்பத ற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.

இந்த வகையில் தற்போது, சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை ரூ.100 கோடி முதலீட்டில் நிறுவு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், விஸ்டியன் நிறு வனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.