சென்னை, ஆக. 26 -
அறிவியலுக்கும், மதச்சார்பின்மை க்கும் ஊறுவிளைவிக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்த சாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
ஆஎஸ்எஸ்-ஸின் காவிமயத்தை வழிமொழியும் தீர்மானங்கள்!
ஆகஸ்டு 24, 25 தேதிகளில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ‘முத்த மிழ் முருகன் மாநாடு’ அறநிலையத்து றையின் சார்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், குறிப்பிட்ட சில தீர்மானங்கள் கல்வி நிலைய வளாகங்களையும் பாட திட்டங்களையும் காவிமயமாக் கும் நோக்கத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளன.
அதாவது, மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட 5-ஆவது தீர்மானம் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறை யின் ஆளுகையின் கீழ் உள்ள திருக் கோயில்களின் சார்பில் நடத்தப் படும் பள்ளிகள் மற்றும் கல்லூரி களில் பயிலும் மாணவ - மாணவியர் களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படு கிறது.” எனவும்; 8-ஆவது தீர்மானமாக: “விழாக் காலங்களில் அருள்மிகு முரு கன் திருக்கோயில்களில் மாணவ, மாண வியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது” எனவும்; 12-ஆவது தீர்மானமாக : “முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது” என வும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
இது கல்வியை இந்து மதச் சார்புடையதாக்கும்; மாணவர்களை மத ரீதியில் பிளவுபடுத்தும்; பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குறிக் கோளை முன்மொழியும் தீர்மானங் களாக இருக்கின்றன.
கல்வித்துறையில் தலையிடுவது அறநிலையத்துறை வேலையல்ல
இந்தியக் கல்வி முறை என்பது மதசார்பின்மையை பிரதிபலிக்கும் கல்வியாக திகழ்கிறது. மதச் சார்பின்மைமிக்க மாநிலமாக- கல்வியின் முன்னோடியாக தற்போதுவரை தமிழ்நாடு விளங்கி வருகிறது. அறநிலையத்துறையின் இத்தகைய தீர்மானம் ஏதோ உள்நோக்கத்துடனும் யாருடைய தூண்டுதல் பெயரிலோ நடந்துள்ளது.
மேலும் இத்ததைய தீர்மானம் என்பது, தந்தை பெரியார் தீவிரமாக எதிர்த்த குருகுல கல்வி முறைக்கு ஆதரவாக உள்ளது. எனவே, அற நிலைய துறையின் வேலை என்பது கோவில்களை சீர்படுத்துவதே தவிர, கல்வித்துறையில் தலையிடுவதல்ல; கல்வியை சீர்படுத்த தமிழ்நாடு கல்வி துறையுள்ளது, பல்வேறு கல்வி யாளர்கள் உள்ளனர்.
கல்வி நிலைய வளாகங்களில் குறிப் பிட்ட மதம் குறித்த விவாதங்களைத் தொடங்குவது, மதத்தை மையப் படுத்திய போட்டிகள் பாடத்திட்டங்கள் இடம்பெறுவது என்பது பிற்போக்கு வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாக மாறிவிடும். நாடு முழுவதும் மதத்தின் பெயரால் கல்வியைக் காவிமய மாக்கும் செயல்களில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ்-இன் குரலையே இந்து அறநிலையத்துறையின் தீர்மானம் ஒலிக்கிறது என்பதை இந்திய மாணவர் சங்கம் சுட்டிக்காட்டுவதோடு, இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் முற்போக்கு விழுமியங் களையும் மதச்சார்பின்மைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பின்னுக்குத் தள்ளும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
கல்வி நிலையங்களில் சாதி - மதத்தை அனுமதிக்க முடியாது
கல்வி வளாகங்களில் சாதி மற்றும் மதம் ஆகியவற்றுக்கான ஆதரவுக் குரல்கள் எதையும் இந்திய மாணவர் சங்கம் அனுமதிக்காது என்பதை யும் தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மதம் சார்ந்த விழாக்களை அரசு முன்னெடுப்பது என்பது அரசி யல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரா னது. ஒரு அரசு மதச்சார்பு அற்றதாக இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழக அரசு தனது கடமைகளில் இருந்து நழுவுவது பொருத்தமான செயல்பாடு அல்ல என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, அறநிலையத்துறை உடனடியாக தீர்மானங்களை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.