சென்னை, மே 24-இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 3,280 வங்கி கிளைகள், 3,450ஏ.டி.எம். மையங்கள் 2,705 ஐ.ஓ.பி. மித்ரா ஆகியவற்றுடன் சிறந்த செயல்பாட்டு திறனை எட்டியுள்ளது.இதன் செயல்பாட்டு லாபம் அதிகரித்துள்ளது. வங்கியின் 82 ஆண்டு கால பயணத்தில், 2018-19 ஆம் நிதி ஆண்டில்தான் அதன் செயல் பாட்டு லாபம் இது வரைக்கும் இல்லாத சாதனை அளவாக ரூ. 5,034 கோடியாக உயர்ந் துள்ளது. இந்த ஆண்டில் வங்கியின் வணிகம் ரூ.3,74,530 கோடியாக இருக்கிறது. இழப்பை சந்தித்து வந்த வங்கி கிளைகள் 2014-15 ஆம் நிதி ஆண்டில் 21.95 விழுக்காடாக இருந்தது. இது 2018-19 ஆம் நிதி ஆண்டில் 4.79 விழுக்காடாக குறைக்கப் பட்டுள்ளன.வங்கியின் அனைத்து வணிக அம்சங்களும் தொடர்ந்து மேம்படத் தொடங்கி இருக்கின்றன. இவை மேலும் மேம்பட்டு 2019-20 ஆம் நிதி ஆண்டில், அனைத்து பங்கு தாரர்களுக்கு லாபத்தை அளிக்கும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர். சுப்யீபரமணியகுமார் கூறியுள்ளார்.வங்கியின் இடர்பாடு சார்ந்த கடன் மதிப்பு ரூ. 1,69,148 கோடியிலிருந்து (நிதி ஆண்டு 2016-17) ரூ. 1,22,585 கோடியாக (நிதி ஆண்டு 2018-19) குறைந் துள்ளது.