tamilnadu

img

இந்தியன் வங்கி தெற்கு மண்டல மேலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை, ஆக.18- மத்திய அரசின் நிதிசார் துறையின் ஆலோ சனையின்படி, நாட்டின் பொருளாதாரத்தை 2024-2015 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக அடை வதற்கான பரிந்துரைகளை பெற கிளை மேலாளர்களிடம் ஆலோசனைகள் பெற கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இந்தியன் வங்கி சார்பாக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியன் வங்கி தெற்கு மண்டலத்தின் சார்பாக ஆக.17 அன்று கிளை மேலாளர்கள் ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் உள்ள  மண்டல அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தியன் வங்கியின் சென்னை தெற்கு மண்டல மேலாளர் பி. சுப்பிர மணியன், மண்டல துணை மேலாளர் ஆர். ராஜசேகர், உதவி பொது மேலாளர்கள், கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர். இந்தியன் வங்கி நிர்வாகம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் மற்றும் கடன் வழங்குவதற்கான ஆலோசனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.  குறிப்பாக விவசாய கடன்கள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான வழிமுறைகள், சிறு மற்றும் குறுந் தொழில் கடன்கள், மகளிர் முன்னேற்றம், பணமில்லா பரிவர்த்தனை, மிண்ணணு வங்கி சேவை கள், அனைவருக்கும் வங்கி சேவைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோகிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்தியின் வங்கி யின் செயல் இயக்குநர் எம்.கே. பட்டாச்சார்யா, கிளை மேலாளர்களிடம் கருத்து க்களை கேட்டறிந்தார்.