சென்னை, ஜூலை 29- தெற்காசியாவின் பெரிய தொழில் நகரம் என்று அழைக்கப்படும் சென்னை, நாட்டின் மோட்டார் விளையாட்டு மையமாக உள்ளது.
ஆகஸ்ட் 30 முதல் செப். 1 வரை மூன்று நாட்கள் இந்தியாவின் ரேசிங் விழா சென்னையில் நடை பெறவுள்ளது. அதன்படி, சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் இரவு நேர கார் பந்தயத்தை நடத்தி சாதனை படைக்க உள்ளது.
இதற்காக தீவுத்திடலை சுற்றி யுள்ள 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் சென்னை பார்
இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தில் தொடங்கி 19 திருப்பங்கள், பல இரட்டை வளைவு கள் மற்றும் நீண்ட தார்ச்சலையில் அமைக்கப்பட்டுள்ள பாதையில் நடைபெறும். முலா கார்பந்தயத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. இதில், 8 அணி கள் தங்களது அதிவேக கார்களோடு பங்கேற்கின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்துடன் இணைந்து இந்த ரேசிங் புரமோஷன் பிரை தனியார் நிறுவனத்தால் நடத்தப் படும் இந்த இரவுநேர கார்பந்தயம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர் களை ஈர்க்கும் என்று நிறுவனத்தின் தலைவர் அகிலேஷ் ரெட்டி கூறி னார்.
“ இந்தியாவின் முதல் இரவு நேர தெரு கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசின் பங்கு மிக மிக முக்கியமா னது. இதற்காக போட்டியை நடத்தும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித் துக் கொண்டார்.
இந்திய ரேசிங் விழா, தெரு கார் பந்தயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த அற்புத மான நிகழ்வு ரசிகர்களுக்கு புதிய கண்ணோட்டத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேகநாத் ரெட்டி, நரேன் கார்த்திகேயன் (ஃபார்முலா-1, ஓட்டுநர்) மற்றும் பலர் உடனிருந்த னர்.