tamilnadu

வாக்காளர் பட்டியலில்  37.73 லட்சம் பேர் திருத்தம்

சென்னை,அக்.4- வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் திட்டத்தில் தற்போது வரை 37 லட்சத்து 73 ஆயிரம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சரி பார்த்தல், திருத்தம் தொடர்பான பணிகள்  குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களு டன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இதற்கு, முன்னதாக செய்தியாளர் களை சந்தித்த சத்ய பிரதா சாகு, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்கு நேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தற்போது வரை 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 9 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 346 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 3 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

;