tamilnadu

img

தமிழகத்தில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த அரசு அனுமதி....

சென்னை:
தமிழ்நாட்டில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதியளிக்கப் பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா தொற்று விதிமுறைகளின் படி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண் டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய்த் தொற்றினால் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கின் காரணமாக, பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பணிகள் முடிவுற்றும், பல மாதங்களாக குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டுள்ளதாகவும், குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் பல கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதுகுறித்து அந்த அறிவிப்பில், ‘தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 16ஆம் தேதி முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா  நடத்த அனுமதிக்கப் படுகின்றது.கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தகுந்த  இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டும்.பொதுமக்களின் நலன் கருதி,  அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.