tamilnadu

img

லண்டனில் முதல்வர் முன்னிலையில் சுகாதாரத்துறை ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை,ஆக.29- தொழில் முனைவோர் சந்திப்புக்காக லண்டன் சென்றுள்ள  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்து டன் (ஐஎஸ்டிசி) சுகாதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாலர் பீலா ராஜேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அவசர ஆம்புலன்ஸ் சேவையையும் முதலமைச்சர் பார்வை யிடுகிறார். லண்டன் கிங்ஸ் கல்லூரி யின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 10 ஆம் தேதியன்று சென்னை திரும்புகிறார்.