tamilnadu

குழாய் பதிப்பு விவகாரத்தில் அதிமுக விஷமப் பிரச்சாரம்... தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்....

சென்னை:
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய் பதிக் கும் திட்டங்கள் குறித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் விஷமத்தனமான அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனம் போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களால் கடந்த ஆட்சிக் காலத்திலிருந்தே, குறிப்பாக 2018ஆம் ஆண்டு முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால் காவிரிப்படுகை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து திருச்சிராப் பள்ளி வரை குழாய்பதிக்கும் திட் டத்தில் சுமார் 104 கி.மீ. நீளத்திற் கும், எண்ணூரிலிருந்து தூத்துக் குடி வரையிலான குழாய் பதிக் கும் திட்டத்தில் 810 கி.மீ. நீளத் திற்கும் குழாய் பதிக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் துவங் கப்பட்டது.

கெயில் நிறுவனத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாதானம்-மேமாத்தூர் குழாய் பதிக்கும் திட்டத்தில் 29 கி.மீ. நீளத்திற்கும், சிங்கசந்திரா-கிருஷ்ணகிரி குழாய் பதிக்கும் திட்டத்தில் 12 கி.மீ. நீளத்திற்கும் மற்றும் கொச்சியிலிருந்து பெங்களுரு வரையிலான குழாய் பதிக்கும் திட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 கி.மீ. நீளத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 கி.மீ. நீளத்திற்கும் ஆக 13 கி.மீ. நீளத்திற்கும்,  கடந்த ஆட்சியிலேயே குழாய்பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.மேலும், இந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் விஜயவாடா - தர்மபுரிகுழாய்பதிக்கும் திட்டத்திற்கு 61 கி.மீ. நீளத்திற்கும், கடந்த ஆட்சிக்காலத்திலேயே குழாய் பதிக்கும் பணிகள்நடை பெற்றுள்ளன.  ஜனவரி 2018ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 முடிய சுமார் 1000 கி.மீ. நீளத்திற்கு பெருவாரியாக விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய்கள் தமிழ்நாட்டில் பதிக்கப்பட்டுள்ளன.எண்ணூர்-மணலி குழாய் பதிக்கும் பணிகள் முடிவு பெற்று இத்திட்டம் கடந்த 6.3.2019 அன்று பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  அதேபோன்று, இராமநாதபுரம்-தூத்துக்குடி குழாய்பதிக்கும் திட்டம் கடந்த 17.2.2021 அன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளின் போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றுள்ளார். உண்மைநிலை இவ்வாறாக இருக்க, தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது குறித்து எதுவும் அறியாததுபோலவும் இத்தகைய திட்டங்கள்தற்போதுதான் புதிதாக செயல்படுத்தப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க ஓ.பன்னீர்செல்வம், குழாய் பதிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது விந்தையாகவும் வியப்பாகவும் உள்ளது.பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக்குழாய்கள் பதிக்கும் திட்டங்களைப் பொறுத்தவரையில், நிலஉரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும் கூடுதல் இழப்பீடு வழங்கியும் இத்திட் டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின் றன. எங்கெங்கெல்லாம் சாத்தியக் கூறுகள் உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசால் வலியுறுத்தப்படுகிறது.திமுக அரசு விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.அதிமுக ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வசதியாக மறந்து, இதுபோன்ற விஷமத் தனமான அறிக்கைகளை இனிமேலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

;