tamilnadu

பேராவூரணியில்  ரூ. 25 கோடியில்  நவீன அரிசி ஆலை

 சென்னை, ஜூலை 5- சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ரூ. 25 கோடியில் தினசரி 100 மெட்ரிக் டன் அர வைத் திறனுடன் நவீன அரிசி ஆலையும், ரூ. 59 கோடியே 40 லட்சத்தில் பல்வேறு இடங்களில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 28 கிடங்குகளும் அமைக்கப்படும்” என்றார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் காய்கறிகள், பழங்கள், புளி, பருப்புவகை கள், பூ உள்ளிட்ட விவசாயப் பொருட்களை  சேமிக்க ரூ. 3.75 கோடியில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவில் சூரிய மின்சக்தியுடன் இயங்கக்கூடிய குளிர்சாதனக் கிடங்கும், 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ. 36  கோடியே 41 லட்சத்தில் சொந்தக் கட்டி  டங்கள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் 143 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ. 24  கோடியே 91 லட்சம் செலவில் நவீனமய மாக்கப்படும் என்றும் அவர் கூறினார். ரூ. 57 கோடியே 70 லட்சம் ருபாயில் 577 கி.  மீட்டர் தூர வனச்சாலைகளை மேம்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 12,500 ஆக உயர்த்தப்படுகிறது என்றும்,  காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரி ரூ. 25 கோடியில் சீரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

;