tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதரவாக செப். 25ல் பொது வேலைநிறுத்தம்....

செங்கல்பட்டு:
விவசாயிகளுக்கு ஆதரவாக செப். 25 ஆம் தேதி பொது வேலை நிறுத் தத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு வழங்கிட வேண்டும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக் கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கொத்திமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை துவக்க விழா மற்றும் சர்வதேச ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அழகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆதிவாசி உரிமைக்கான தேசிய அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான  பெ.சண்முகம்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் கிளையின் பெயர்ப் பலகை சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனின், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சி.முருகேசன், உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். மாவட்டப் பொருளாளர் கே.ராமு  நன்றி கூறினார். முன்னதாக மலைவாழ் மக்களின் குழந்தைகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிவாசி உரிமைக்கான  அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான  பெ.சண்முகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிவாசி மக்கள் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் ஒரு முன்னேற்ற கரமான இதர சமூகத்திற்கு ஈடாக வாழ்க்  கையை எட்ட முடியாத நிலை உள்ளது. ஒன்றிய - மாநில அரசுகள் பழங்குடியின துணைத் திட்டம் என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்தாலும் அந்த நிதி ஆதிவாசிகளுக்கும், பழங் குடியின மக்களின் வீடுகளுக்குச் சென்று சேருவதில்லை.  இடைத்தரகர்களால் சுரண்டப்பட்டுக் கொள்ளையடிக்கப்படுகின்றது.  அரசு ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் நிதி அவர்களிடம் முழுமையாக வந்துசேர  ஒன்றிய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பழங்குடி துணைத் திட்டத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு எது தேவை என்பது சம்பந்தமாகப் பழங் குடி  சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசி திட்டமிடவேண்டும், அதிகாரிகளிடம் மட்டும் பேசி திட்டங்களை உருவாக்குவது  பழங்குடி மக்களுக்குத் தொடர்பில்லாத திட்டங்களுக்கு நிதி செலவு செய்யும் அவலநிலை என்பது இருந்து வருகின்றது. தலித் பழங்குடியின மக்கள் பின்னடைவு காலிப் பணியிடங்கள் பல் லாண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு குறிப் பிட்ட கால வரையறைக்குள் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிடவேண்டும் என உத்தரவிட்ட பிறகும் இதுவரை தமிழகத்தில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழக முதல்வர் தலித் பழங்குடியின மக்களின் பின்னடைவு காலிப் பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் காலிப்பணியிடங் களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  பழங்குடியின இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் அவதிப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பாஜக அரசின் அடக்குமுறை
தலைநகர் தில்லியில் கடந்த பத்து மாதங்களாகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு செயல்பட்டுவருகின்றது. விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குப் பதிலாக அடக்குமுறையை ஏவுவது, அவதூறு பரப்புவது.  போன்ற செயல் பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் போலிஸ் அடக்குமுறைக்கு ஒரு விவசாயி மரணமடைந்துள்ளார்.

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்
ஹரியானா மாநில காவல் துறைக் குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் கண்டனத்தைப் பதிவு செய்கின்றோம். நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தமிழக முதல் வரைச் சந்தித்து இந்த போராட்டத் திற்கு திமுக சார்பில் ஆதரவு வழங்க
வேண்டும் என வேண்டுகோள் விடுத் துள்ளோம். அவர் நிர்வாகிகளிடம் கலந்து பேசி பதில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்குத் தமிழக மக்கள் ஆதரவு வழங்கிட வேண்டும் என்றார் சண்முகம்.

;