சென்னை:
தில்லியில் மயூர் விஹார் பகுதில் கட்டப்பட்டுள்ள புதிய தமிழ் பள்ளிக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 12 அன்று திறந்துவைக்கவுள்ளார்.
தில்லி தமிழ் கல்விக்கழகம் சார்பில்7 பள்ளிகள் செயல்பட்டுவரும் நிலையில்8ஆவதாக ஒரு பள்ளிக்கு கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்நாட்டினார். இதில் முதல்வர் அடிக்கல்நாட்டிய அம்மா பிளக்க கட்டிடத்தின்முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள் ளன. இதனை நவம்பர் 12 வியாழக்கிழமையன்று சென்னையில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.வகுப்பறை, ஆய்வுக்கூடம், நூலகம் உள்ளிட்ட 37 அறைகளை கொண்ட இப்பள்ளிக்கு தமிழகஅரசு சார்பில்ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியால் தில்லியில் உள்ள ஏழை,எளிய தமிழ் மாணவர்கள் பயன்பெறுவர்.