எம்ஆர்பி செவிலியர்கள் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுக!
முதலமைச்சருக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை
சென்னை, ஏப். 27 - எம்ஆர்பி செவிலியர்கள் தொடர்பான தீர்ப்பை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்று எம்.சின்னதுரை எம்எல்ஏ வலி யுறுத்தி உள்ளார். தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் 3வது மாநில மாநாடு சனிக்கிழமையன்று (ஏப்.20) எழும்பூரில் நடை பெற்றது. பொது மாநாட்டில் பங்கேற்று எம்.சின்னதுரை பேசியதன் சாராம்சம் வருமாறு: சமவேலைக்கு சம ஊதியம் தராத அரசை சமூக நீதி அரசு என்று கூற முடியாது. சட்டமன்றத்தில் கோரிக்கைகளை எழுப்பி னாலும், களத்தில் நடை பெறும் போராட்டமே கோரிக்கைகளை நிறை வேற்ற வழிவகுக்கும். செவிலியர்களின் பிரச்சனை களை தீர்க்க அரசு தனி இயக்குநரகத்தை உரு வாக்க வேண்டும். மேலும், செவிலியர் பல்கலைக் கழகம் ஒன்றையும் அரசு தொடங்க வேண்டும். எம்ஆர்பி செவிலியர்கள் தொடுத்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முதலமைச்சர் நிறை வேற்ற வேண்டும். தமிழ கத்திற்கு 1.75 லட்சம் செவி லியர்கள் தேவை. தற்போதுள்ள செவிலியர் பணியிடங்களில் சரிபாதி அளவு காலி இடங்கள் உள்ளன. 65 ஆயிரம் செவி லியர்களை கொண்டே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு செவிலியர்க ளின் அர்ப்பணிப்பு மிக்க பணியே காரணம். இதனை உணர்ந்து செவிலியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற முன்வர வேண்டும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாத அரசை சமூக நீதிக்கான ஆட்சி என்று ஓங்கி ஒலிக்க முடியாது. செவிலியர்களின் கோரிக்கைகளை சட்ட மன்றத்தில் தொடர்ந்து வலு வாக எழுப்புவோம்; களத்தி லும் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்த பொது மாநாட்டி ற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.சசிகலா தலைமை தாங்கினார். வர வேற்புக்குழுச் செயலாளர் ம.அந்தோணி சாமி வர வேற்றார். தி ரேடியால ஜிக்கல் அசிஸ்டென்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் மொ.ஞானத்தம்பி பொது மாநாட்டை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தோழமை சங்கத் தலைவர்கள் உரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் சா.டானியல் ஜெயசிங் நிறைவுரையாற்றினார். போராட்டம் அறிவிப்பு இதனிடையே மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி பேசிய பொதுச் செயலாளர் நே.சுபின், தேர்தல் வாக்குறுதிப்படி தொகுப்பூதியத்தில் பணி யாற்றும் எம்ஆர்பி செவி லியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 12 அன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்று வோம். மே 20ந் தேதி நடை பெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற் போம். ஜூன் 26 அன்று சென்னையில் 24 மணி நேர தொடர் தர்ணா போரா ட்டத்தில் ஈடுபடுவோம். ஜூலை 17 அன்று டிஎம்எஸ் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறைகூவல் விடுத்தார். பேரணி மாநாட்டையொட்டி எழும்பூர் பழைய சித்ரா தியேட்டர் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் தலைவர் மு.செல்வராணி தொடங்கி வைத்தார், பேரணியை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.குபேரன் உரை யாற்றினார். சென்னை மாவட்டத் தலைவர் செ.அமுதா நன்றி கூறினார்.
மாநாட்டில் சங்கத்தின் தலைவராக கு.சசிகலா, பொதுச் செயலாளராக நே.சுபின், பொருளாளராக ச.ஹேமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.