tamilnadu

வடகிழக்கு பருவமழையினால் பெருவெள்ளம்; கடும் பாதிப்பு!தமிழ்நாடு அரசு கோரிய நிதியை உடனடியாக விடுவித்திடுக!

சென்னை, டிச. 14 - பெஞ்சால் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் ஏற் பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு - நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கோரிய நிதியை உட னடியாக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடுமையான பாதிப்பு

பெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழி வால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட் டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.  30 பேர் உயிரிழந்துள்ளனர், 1 லட்சத்து 69 ஆயிரத்து 043 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

\தற்போது கடந்த இரு தினங்களாக தமிழ் நாட்டில் பெய்து வரும் கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிர பரணி ஆறு கடலில் கலக்கும் இடமான திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக மாறியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடு களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பொதுமக்கள் தங்களது உடமைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சாலை களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  

வேதனையில் தவிக்கும் மக்கள்

தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டி ருப்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது தமிழக மக்கள் சொல்லொண்ணா துயரங்களிலும், வேதனையிலும் மூழ்கி வருகின்றனர்.

ஏற்கெனவே பெஞ்சால் புயலால் விழுப்பு ரம், கடலூர், கள்ளக்குறிச்சி,  திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி,  தர்மபுரி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு - மறுசீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ. 6,675 கோடி நிதி ஒதுக்கிட வேண்டுமென ஒன்றிய அரசை, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு!

காலநிலை மாற்றத்தால் கடந்த 10 ஆண்டுக ளாக பல்வேறு இயற்கை பேரிடர்களால் தமிழ கம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பு களுக்கு முறையான நிதியினை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டி வருகிறது. ஆண்டுதோறும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட தொகையைத் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு உரு வாக்கி வருகிறது. 

குறிப்பாக மிக்ஜாம், பெஞ்சால் புயலுக்கு இதுவரையில் ஒன்றிய அரசின் சார்பில் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. இது தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.

நிதியை உடனே வழங்குக!

எனவே, ஒன்றிய பாஜக அரசு இனியும் வேடிக்கை பார்க்காமலும், அரசியல் காழ்ப்பு ணர்ச்சியுடன் செயல்படாமலும் பெஞ்சால் புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கோரியுள்ள நிதியினை உடனடி யாக விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழையினால் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதி களில் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படை யில் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.