tamilnadu

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

திருப்பூர், நவ. 14– சென்னை ஐஐடி மாணவி பாத் திமா லத்தீப் தற்கொலை வழக்கில், அதற்குக் காரணமான பேராசிரியர் உள்ளிட்டோரை கைது செய்து சட் டப்படி தண்டனை வழங்க வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி முன்பாக வியாழக் கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது தலைமை ஏற்று கோரிக் கையை வலியுறுத்திப் பேசினார். இதையடுத்து ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர் கதையாகி வரும் நிலையில், இதற் குக் காரணமான பேராசிரியர் உள் ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத் தியும், கட்டண உயர்வை எதிர்த்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருவதற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாணவர் சங்கத் தின் மாநில துணைத் தலைவர் ஜி.நிருபன் சக்கரவர்த்தி நிறை வுரை ஆற்றினார். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

;