tamilnadu

img

மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன்: பிரபு எம்எல்ஏ...

சென்னை:
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கள்ளக் குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவியை நேரில் ஆஜர்படுத்த வேண் டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர் யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.திருச்செங்கோடு கல் லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்கும் சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதி பிரபுவின் இல் லத்தில் மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் பிரபு - சௌந்தர்யா திருமணம் முடித்ததாக அவர்களின் புகைப்படமும், சௌந் தர்யா வீட்டில் மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு வீடியோ வெளியிட்டார்.சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரதுதந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு கடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அப்புகார் வாங் கப்படவில்லை என்று கூறப் படுகிறது.இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன்  ஆட் கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் படிக்கும் பெண்ணிடம் எம்.எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்திவிட்டதாக மனுவில் தெரிவித் துள்ளார்.இந்த மனுவை அவசரவழக்காக விசாரிக்க வேண்டுமென பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது.முறையீட்டை கேட்ட நீதிபதி வெள்ளியன்று (அக்.9) இந்த வழக்கை விசாரிப்பதாகவும், இந்த விசாரணைக்கு செளந்தரியா, மற்றும் அவரின் தந்தை சுவாமி ஆகியோரை  மதியம் 2.30 மணிக்கு காவல்துறை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.நீதிமன்ற உத்தரவின் படி, மனைவியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன் என எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.