சென்னை, மே 17-ஹூண்டாய் கார் தொழிற் சாலையில் தொழிற்சங்கம் துவக்கியதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன், 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாடி ஷாப் பிரிவில் பணியாற்றிய 98 தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக 8 நாள் சம்பள பிடித்தம் செய்யப்பட்டது. இந்த ஊதியத்தை திரும் பத்தரக்கோரி, `ஹூண்டாய் மோட்டார் எம்ளாயிஸ் யூனியன் (எச்எம்இயூ) சார்பில் அதன் உறுப்பினர்கள் 51 பேருக்கு ஆதரவாக தொழிலாளர் துறையில் கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொழிற் தகராறு வழக்கு தொடரப் பட்டது.அதில் சமரசம் ஏற்படாத நிலையில் 25.08.2008 அன்று சமரச முறிவு ஏற்பட்டது. தமிழக அரசு இந்த வழக்கில் 22.09.2009 அன்று அரசாணை எண் (டி) 509 வெளியிட்டது.அதன்படி இந்த தொழிற் தகராறு வழக்கு காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு நடந்து வந்த சூழலில் நிர்வாகம் தொழிலாளர்களை அச்சுறுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆயினும் சங்கம் தொடர்ந்து வழக்கை நடத்தியது. இந்நிலையில் இன்று மே 16 ஆம் தேதி 51 தொழிலாளர்களுக்கும் 8 நாட்கள் சம்பளம் பிடித்தது தவறென்றும், அதை திரும்ப ஒப்படைக்கவும் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தொகை தொழிலாளர் நலவாரியத்தில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளதால் அதற்கான வட்டியுடன் தொழிலாளர்களுக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் திறம்பட வாதாடி தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த வழக்கறிஞர் பிரதாபனுக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக் களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஹூண்டாய் மோட் டார் எம்ப்ளாயீஸ் யூனியன் கவுரவத்தலைவர் அ.சவுந்தரராசன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.