சென்னை, ஜூலை 25 – விடுதியில் தரமற்ற உணவு வழங்கு வதை கண்டித்து வியாழனன்று (ஜூலை 25) முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநிலக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாநிலக்கல்லூரி மாணவர்கள் விக்டோரியா விடுதியில் தங்கி உள்ள னர்.
இந்த மாணவர்களிடம் விடுதி, உணவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. அசைவ உணவை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். எனவே, தரமற்ற உணவை வழங்கும் ஒப்பந்ததாரரை ரத்து செய்துவிட்டு, மீண்டும் மாணவர்கள் நடத்தும் உணவக முறையை கொண்டு வர வேண்டும், சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 800 மாணவர்கள் அமர்ந்து உண்ணும் அளவிற்கு ஆடவர் விடுதி உணவகத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் கோரி வருகின்றனர்.
இதன் மீது கல்லூரி நிர்வாகம் முறையாக நட வடிக்கை எடுக்கவில்லை. இதனை யடுத்து மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்கினர். மேலும், கல்லூரி மற்றும் விடுதி கழிவறையை மறுசீரமைத்து தர வேண்டும். பழுதான கல் இருக்கை களை (ஸ்டோன் பென்ச்) புதுப்பிக்க வேண்டும், ஆசிரியர் இல்லாததால் மலையாள துறைக்கு புதிதாக ஆசிரியரை நியமித்து இளங்கலை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்,
இந்தி, தெலுங்கு போன்ற மொழியியல் துறைகளுக்கு முறை யான வகுப்பறைகள் அமைத்து தர வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதனையடுத்து முதல்வரின் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாணவர்களுக்கு பதிலளிக்க முடியாத முதல்வர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அதன்பிறகும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் கல்லூரி கல்வி இணை இயக்குநர் இராவணன் நேரில் வந்து மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரு வதாக உறுதி அளித்தார். இதனை யடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மாணவர்கள் கிளைத் தலைவர் சுபஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் எஸ்.மிருதுளா, கிளைச் செய லாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.