சென்னை, மே 30-திமுக ஆட்சியின் போது உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றியவர் எம்.எஸ். ஜாபர்சேட். தற்போது சிபிசிஐடி டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவிஉள்பட சிலருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டுதிருவான்மியூரில் அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ஜாபர்சேட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கூட்டுசதி, முறைகேடு,ஊழல் தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.ஜாபர்சேட் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால்அவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் முறையான அனுமதியை தமிழக அரசுபெற வேண்டும். ஆனால் அந்த அனுமதியைபெறாமலேயே சென்னையில் உள்ள ஊழல்தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்புகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தனர்.இதில் ஜாபர்சேட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கேட்டுமத்திய அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளோம். அந்த அனுமதி கிடைத்ததும் அதைமுறையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று காவல்துறையினர் உத்தரவாதம் அளித்திருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் அந்த குற்றப்பத்திரி கையை விசாரணைக்கு ஏற்றது. ஆனால் ஜாபர்சேட் மீது வழக்குப் பதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகலைவிசாரணை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர்சேட் மனு ஒன்றை தாக்கல்செய்தார். அதில் தமிழக டி.ஜி.பி.யாக இருப்பவர் வருகிற ஜூன் மாதத்துடன் ஓய்வுபெறுகிறார். சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.பதவிக்கு என்னுடைய பெயரும் பரிந்துரைசெய்யப்பட் டுள்ளது. என் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கமறுத்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுநகலை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், இதுவரை நீதிபதி எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே எனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்தார். ஜாபர்சேட் டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கினால் மட்டுமே குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்க வேண்டும். அனுமதி இல்லாமல் தாக்கல் செய்யப் பட்ட குற்றப்பத்திரிகையை கீழ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்ற விசாரணையை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகி விடும். எனவே ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர்சேட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரி கையை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என்றார். ஜாபர்சேட் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவி பெறுவதற்கான முழு தகுதி பெறுகிறார். இதற்கான பட்டியலில் ஜாபர்சேட் தான் சீனியராக உள்ளார்.எனவே விரைவில் தமிழக டி.ஜி.பி. பதவிஅவருக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.