tamilnadu

img

வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்துக!

வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். எனவே வாக்கு எண்ணும்போது கவனமுடன் செயல்பட வேண்டும் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 21 -வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி திமுகசார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் செவ்வாயன்று மனு அளிக்கப் பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலில் பதிவானவாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய, மாநில அரசுகள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. கோவை, இராமநாதபுரம், கரூர், தேனி உள்ளிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணிக் கட்சியினர் எந்தஎல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். எனவே இந்த 4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும்போது திமுகவினர் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று திமுக முகவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.இந்த நிலையில் திமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவை செவ்வாயன்று சந்தித்த முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வாக்கு எண்ணிக்கைதொடர்பாக 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அவரிடம் சமர்பித்தனர்.

அந்த மனுவில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும். ஒப்புகை சீட்டை சரிபார்க்கும் போது முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஆர்.எஸ்.பாரதி, “வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதித்துள்ளார்கள். நாங்கள் மனு அளித்ததன் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மேலும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின்போதும் எந்தெந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதற்கு ஜெராக்ஸ் காப்பி அல்லது கார்பன் காப்பி அளிப்பதாக ஒப்புக்கொண்டனர். விவிபேட் இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் போது தனி முகவர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி னோம். அதற்கு எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். தேர்தல்ஆணையம் இன்று சொல்வதை யெல்லாம் வைத்துப் பார்க்கும்பொது நடுநிலையோடு செயல்படும் என்று நம்புகிறோம்.அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை சிறிய அறையில் நடத்தப்படுகிறது. அங்கு 64 வேட்பாளர்கள் உள்ளனர். எனவே முகவர்களே பலர் இருப்பார்கள் என்பதால் பெரிய அறைக்கு வாக்கு எண் ணிக்கையை மாற்ற வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்று வேறு அறைக்கு மாற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.