நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்வு, பெரம்பூர் பகுதி, 37வது வட்டம் கண்ணதாசன் நகரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 500 குடும்பங்களுக்கு மருந்து வழங்கப்பட்டது. மருத்துவர் சுப்ரியா, பகுதி செயலாளர் அ.விஜியகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஹேமாவதி மற்றும் எம்.ராஜ்குமார், டி சரவணன் ராஜன் துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.