தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம்
சென்னை, ஆக.12- சுதந்திர தினத்தையோட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்று நீதிபதி கூறினார்.
சுதந்திர தினத்தையொட்டி, குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றுவதற்கு, முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் திங்களன்று நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார் என்பது குறிப்பிடத் தக்கது
அறிவியல், கணிதம் மீதான ஆர்வத்தை தூண்டும் மெக்கத்லான் போட்டி
சென்னை,ஆக.12- தொழில்நுட்பம் வேக மாக வளர்ச்சியடைந்து வரும் இந்த உலகத்தில், கே 12 டெக்னோ சேவை நிறுவனமானது காமன் வெல்த் இளைஞர் பேரவை, காமன்வெல்த் மாணவர் சங்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உலகளா விய புரிதல் அமைப்புடன் (ஜியுஎஸ்டி) இணைந்து மெக்கத்லான் போட்டியை அறிமுகம் செய்துள்ளது.
8 முதல் 18 வயது வரையி லான மாணவர்கள் மத்தியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம்) மீதான ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மும்பை, ஹைதராபாத், சென்னை, குருகிராம், புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த STEM ஃபெஸ்ட்-மெக்கத் லான் போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டியில் மலே சியா, சிங்கப்பூர், ஹாங் காங், தாய்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பூடான் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
தங்கம் விலை உயர்ந்தது
சென்னை,ஆக.12- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.51,560-க்கு விற்பனையான நிலை யில் திங்களன்று சென்னை யில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவர னுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனை யானதுதங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.