சென்னை,ஆக.21- பெண்கள் மற்றும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டிய லிடக் கூடாது என வலியுறுத்தி தலைமை நீதிபதியிடம் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் 64 பேர் மனு அளித்தனர். சமீபத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலி யல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் மீது தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கிறிஸ்தவ கல்வி நிறு வனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவ தாக, வழக்கிற்கு சற்றும் சம்பந்தமில்லாத விதத்தில் தெரிவித்திருந்தார். மேலும், பெண் கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப் படுவதாகவும் போகிற போக்கில் அராஜகக் கருத்துக்களை அவிழ்த்துவிட்டார். நீதிபதி வைத்தியநாதனின் இந்த கருத்து க்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில், இனி பெண்கள் மற்றும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிடக் கூடாது என சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமை யில் 64 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி யிடம் மனு அளித்துள்ளனர். அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோரின் விரல்களை வெட்ட வேண்டும் என்று கூறியது; 2015ஆம் ஆண்டு கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்தது என வழக்கிற்கு சம்பந்த மில்லாத கருத்துக்களை தெரிவிப்பது, உத்த ரவு போடுவது நீதிபதி வைத்தியநாதனுக்கு புதிதல்ல என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வழக்கிற்கு சம்பந்தமில்லாமலும் புள்ளிவிவர ஆதாரங்கள் இல்லாமலும் நீதிபதி வெளிப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்கள் சமுதாயத்தில் மத ரீதியான வெறுப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்ல; நீதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிர யோகம் செய்வதும் உறுதியாகிறது. கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்த கருத்து, கிறிஸ்தவர்கள் மீதான அவருடைய தனிப்பட்ட வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. தங்களுடைய சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் தளமாக நீதிமன்றங்களை நீதிபதிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ள நிலையில், நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்லாமல் நீதிபதி கிருபாகரனும் இதே போன்று வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்” என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ‘பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் தான் கள்ளத் தொடர்புகள் அதிகரித்தது’ என்றும்; ‘குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் ஆணுறுப்பை துண்டிக்க வேண்டும்’ எனவும் சம்பந்தமில்லாத வழக்கில் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்ததும் பின்னர், அதனை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்ததையும் வழக்கறிஞர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். நீதிபதிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளது உயர் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.