tamilnadu

img

தென் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்

நாளை தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,  தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக மாற உள்ளது. இலங்கை திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் இந்தப் புயல், மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து பின்னர் குமரி பகுதிக்கு வருகிறது. இதனால் இன்று தென் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை புயல் கரையைக் கடக்க இருப்பதால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் 4 தேதி வரை மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;