tamilnadu

7 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை,அக்.13- சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கான அநேகமான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில்  விலகுகிறது.இந்நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில்,   15 - 16 ஆம் தேதிகளில்  வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கும் .

அக்டோபர் 14 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும். 15 ஆம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது 

அக்டோபர் 16 இல் வட தமிழகத்தில் பெரும்பாலான  இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும்.  

17 ஆம் தேதியன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.