tamilnadu

img

கனமழை எதிரொலி டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

சென்னை, நவ.26- 
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கோணத்தில்இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை 5 மாவட்டங்களுக்கு விரைகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.