சென்னை, டிச. 14 - வங்கக்கடலில் உரு வான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பர வலாக மழை பெய்து வரு கிறது. குறிப்பாக, திருநெல் வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்க ளில் பல இடங்களில் கன மழை முதல், அதி கனமழை கொட்டியது.
இந்நிலையில், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு வெள்ளியன்று நேரில் சென்று ஆய்வு மேற் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென் காசி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர்களுடன் காணொ லிக் காட்சி வாயிலாக ஆலோ சனை நடத்தினார். அப்போது கனமழை கார ணமாக ஏற்பட்டுள்ள பாதிப் புகள் குறித்தும், மேற்கொள் ளப்பட்டு வரும் நிவாரண பணி கள் குறித்து கேட்டறிந்து தேவையான அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து, சனிக் கிழமை (டிச.14) அன்று தென் மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு குறித்து, தலை மைச் செயலகத்தில் முதல மைச்சர் ஆலோசனை நடத்தி னார். அப்போது, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணை யின் நீர் இருப்பை கண்கா ணிக்க வேண்டும்; அணை களில் இருந்து நீரினைத் திறந்து விடும்போது பொது மக்களுக்கு உரிய முன்னெச் சரிக்கை விடுக்க வேண்டும்; தாழ்வான பகுதிகளில் வசிக் கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கனமழையால் ஏற்பட்ட பயிர்ச்சேத விவரங்கள் உட் பட அனைத்து சேத விவ ரங்களையும் துரிதமாகக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல மைச்சர் அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் க. துரை முருகன், அதிகாரிகள் மற் றும் அரசு உயர் அலுவலர் ள் கலந்து கொண்டனர்.