திருப்பூர், ஜூலை 10- கல்விசேனலை பார்க்க வசதியாக திருப்பூரில், 158 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும் பாலான பள்ளிகளில் டிவி இல்லையென தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித் துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சேனல் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சேனல் அதிகாலை 5 மணி முதல் நண் பகல் 1 மணி வரையும், அதே நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பாக தொடர்ந்து, நாள் முழு வதும் ஒளிபரப்பப்படும். செட்டாப் பாக்ஸில் 200ஆவது சேனலாக, இலவச மாக ஒளிபரப்பாகிறது. இதனால் அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை பார்த்து பயன் பெறலாம். இதற்காக, அரசு பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள158 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் விநி யோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அனைத்து பள்ளிகளிலும் கல்வி சேனலை ஒளிபரப்புவதை உறுதி செய்ய வேண்டு மென கல்வித்துறை அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். ஆனால் நூற்றுக்கு மேற் பட்ட பள்ளிகளில் டிவி இல்லை. இந் நிலையில் ஆசிரியர் கழக நிதியிலிருந்து டிவி வாங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பள்ளி பராமரிப்புக்கே அந்த நிதி சரியாகி விடுகிறது. எனவே அரசு உரிய நிதி ஒதுக்கி டிவி வழங்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.