சென்னை, ஜூன் 17- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பா ளராக அன்னியூர் சிவா நிறுத்தப் பட்டுள்ளார். இவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக 9 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை யும் அமைத்து உள்ளார். இந்த குழு வில் திமுக துணைப் பொதுச்செய லாளரும், அமைச்சருமான க.பொன் முடி, கொள்கை பரப்புச் செயலா ளர் எஸ். ஜெகத்ரட்சகன், அமைச் சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அர. சக்கரபாணி, தா.மோ. அன்பரசன், எஸ்.எஸ். சிவசங்கர், சி.வி. கணே சன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் இடம் பெற்றுள்ள னர். இவர்களுடன் எம்எல்ஏ ஆர். லட்சுமணனும் இடம் பெற்றுள்ளார்.
இந்த பணிக்குழுவின் ஆலோ சனைக் கூட்டம், விக்கிரவாண்டி யில் ஜூன் 14 அன்று நடைபெற்றது. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இதில், தேர்தல் பணி கள் தொடர்பான வியூகங்கள் வகுக் கப்பட்டு, அதனடிப்படையில், ஒவ் வொரு ஒன்றியத்துக்கும் நிய மிக்கப்பட்ட அமைச்சர்கள் அப் பகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.
காணை மத்திய ஒன்றியத் திற்கு அமைச்சர் கே.என். நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத் துக்கு அமைச்சர் எ.வ. வேலு, மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோர் பொறுப்பாக்கப்பட்ட நிலை யில், அவர்கள் அந்தந்த ஒன்றிய நிர்வாகிகளை அழைத்துப் பேசி னர். இதே போல் காணை வடக்கு ஒன்றியத்தில் அமைச்சர் சக்கர பாணி, கோலியனூர் மேற்கு ஒன்றி யத்தில் அமைச்சர் தா.மோ.அன்பர சன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றி யத்தில் அமைச்சர் எஸ்.எஸ். சிவ சங்கர் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில், திமுக கட்சி அமைப்பு அடிப்படையிலான ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது 20 ஆயிரம் வாக்குகளைப் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்காக பணிகளும் கட்சி நிர் வாகிகளிடம் பிரித்து ஒதுக்கப்பட்டது.
மேலும் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னி யூர் சிவாவை ஆதரித்து, கட்சி யின் தலைவரும், தமிழக முதல்வ ருமான மு.க. ஸ்டாலின் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி யில் பாமக வேட்பாளராக சி. அன்பு மணியும், நாம் தமிழர் கட்சி வேட்பா ளராக டாக்டர் அபிநயாவும் நிறுத் தப்பட்டுள்ளனர். அதிமுக, தேமு திக கட்சிகள் தேர்தல் களத்தை பாஜக - பாமக கூட்டணிக்கு விட் டுக்கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பாஜக கூட்டணிக்காகவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு!
ஆர்.எஸ்.பாரதி தாக்கு
சென்னை, ஜூன் 17- சென்னை அண்ணாஅறி வாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந் தித்தார். அப்போது அவர் பேசிய தாவது:
“தேர்தலின் போது, வாக்குச் சாவடியை கைப்பற்றும் கலாச் சாரத்தை கொண்டு வந்ததே அதி முகதான். 1992 பரங்கிமலை கண் டோன்மென்ட் தேர்தலில் முதல் முறையாக வாக்குச்சாவடியை கைப்பற்றும் வன்முறையை அறி முகப்படுத்தியது அதிமுகதான்.
2000 வாக்குகள் உள்ள வாக் குச்சாவடியில் 2300 வாக்குகள் போட்டது அதிமுக. ஆலந்தூர் நக ராட்சியில் 20 பூத்துக்களில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டு களை அதிமுகவினர் போட்டனர். அதிமுக நடத்திய பூத் கேப்சரிங் விஷயத்தால் பாதிக்கப்பட்டவர் களில் நானும் ஒருவன்.
விக்கிரவாண்டி இடைத்தேர் தலை நடத்துவது தேர்தல் ஆணை யம்தான், தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என் பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக் கணிப்பதற்கு திமுகவை குறை கூறக் கூடாது. எப்படியாவது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்கா கவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. மேலும், இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சம். அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி பிதற்றுகிறார்.
எடப்பாடி பழனிசாமி தேர் தலை புறக்கணித்து விட்டோம் என்று அறிவித்துள்ள நிலை யில், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் யாரும் வாக்களிக்க மாட்டார் களா? வாக்களிக்க வேண்டாம் என கட்சிக்காரர்களை கேட்டுக் கொள்ளும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா? அதி முகவில் யார் யாரெல்லாம் வாக்க ளிக்கிறார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்க உள்ளோம்.
நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தில் தான் ஜனநாயகம் பாதுகாக்கப் பட்டுள்ளது. இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். நாங்கள் வலுவாக உள்ளோம். திமுக ஆட்சியில் மக்கள் பயன்பெற்றுள் ளனர். அவர்கள், பாமக தலைவர் அன்புமணி தடுத்தாலும் திமுக வுக்குத்தான் வாக்களிப்பர் என்றார். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார்.