tamilnadu

img

சுதந்திரம் காப்போம்! தேசத்தின் அடித்தளத்தை மாற்றி அமைப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 78-ஆவது சுதந்திர தின வாழ்த்து!

சென்னை, ஆக. 14 - பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்; நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூக அமைப்பின் சுரண்டலிலிருந்து மக்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று நாட்டின் 78-ஆவது சுதந்திர தின வாழ்த்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சூளுரைத்துள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

பிரிட்டிஷ் ஆட்சியால் பூட்டப்பட்டிருந்த அடிமைச் சங்கிலிகள் நொறுக்கப்பட்டு, கோடானு கோடி மக்களின் பிரம்மாண்ட எழுச்சியின் விளை வாக உறுதி செய்யப்பட்ட தேச விடுதலையின் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதயப்பூர்வமான, புரட்சிகர மான விடுதலைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. “ஆடுவோமே பள்ளு  பாடுவோமே ஆனந்த சுதந்திரம்  அடைந்துவிட்டோ மென்று ஆடுவோமே பள்ளுபாடுவோமே”-என மகாகவி பாரதி, தேச விடுதலைக்கு முன்பே இயற்றிய சுதந்திர கீதத்தை நனவாக்கும் பொருட்டு இந்திய நாடு சிந்திய ரத்தமும் செய்த தியாகங்களும் வரலாற்றுப் பக்கங் களின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.

மத்திய ஆட்சியில் துரோகிகள்

அதேவேளையில், இந்திய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த, பிரிட்டி ஷார் ஆட்சிக்கு வெண்சாமரம் வீசிய, மத வெறி பிடித்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் துரோ கங்களும் வரலாற்றில் அழிக்க முடியாத அவமானமாக இருந்து கொண்டிருக்கின்றன.

அத்தகைய அவமானத்தின் உச்சமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்தி யில் ஆர்எஸ்எஸ்-சின் அரசியல் முகமாம் பாஜக தலைமையிலான ஆட்சி, இந்திய தேசத்தின் விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தையும் அதன் மூலம் உறுதி செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயக குடி யரசு எனும் அரசியலமைப்புச் சட்ட விழு மியங்களையும் அழித்தொழிக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

அதற்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய மக்களும் எழுந்து நின்று பாஜகவின் முயற்சிகளுக்கு பலத்த அடி கொடுத்து, நாடாளுமன்றத்தில் 240 இடங்களை மட்டும் அக்கட்சிக்கு அளித்து தனிப்பெரும்பான்மையை பறித்த  18-ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் இன்றைய விடுதலைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அதிகரித்த முதலாளித்துவ கொள்ளை

கடந்த 10 ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த நாசகர பொருளாதார கொள்கைகளை யும், நவீன தாராளமயம் - தனியார்மய கொள்கைகளையும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் மோடி அரசு தீவிரப் படுத்தியுள்ளது. அம்பானியின் பகல் கொள்ளையை ஹிண்டர்பர்க்கின் இரண்டா வது அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இக்கொள்ளைகளால் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தீவிர மடைந்து வருகின்றன. கார்ப்பரேட் முத லாளிகள் சொத்துக்களை குவிப்பதும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொத்துக்கள் திவால் ஆவதும் அதிகரித்துள்ளது.

மதவெறித் தாக்குதல்கள்

சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் களைத் தீவிரப்படுத்தியுள்ளது; மூன்று கொடிய குற்றவியல் சட்டங்களை அம லுக்கு கொண்டுவந்ததன் மூலம் தேசத்தையே சிறைக்கொட்டடியாக மாற்றும் குரூர நட வடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது; வக்பு வாரிய சட்டமசோதா என்ற பெயரில் சிறு பான்மை மக்களின் சொத்துக்களை சூறை யாட முயற்சி மேற்கொண்டுள்ளது;

மதவெறி மற்றும் கார்ப்பரேட் நலன் என்ற இரட்டை இலக்கோடு, சர்வதேச நிதி மூலதனத்தால் இயக்கப்படும் நவீன தாரா ளமயக் கொள்கைகளை அமலாக்குவதில் உச்சக்கட்டத்தை எட்டிவரும் மோடி அரசு நாட்டின் 78 ஆண்டுகால சுதந்திரத்தை விலைபேசி வருகிறது.

ஒற்றுமையை வலுப்படுத்துவோம்!

இதற்கு எதிராக, நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை மேலும் மேலும் வலுப்படுத்துவோம்; மிக மிகக் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் - விவ சாயிகள் வர்க்கங்களை முன்னெப்போதை யும் விட வலுவாக அணிதிரட்டுவோம்; பிரிட்டி ஷாரிடமிருந்து பெற்ற அரசியல் சுதந்தி ரத்தை - நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூக அமைப்பிடமிருந்து பெறும் பொரு ளாதார சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்ல அனைத்து இடதுசாரிகள் மற்றும் புரட்சிகர சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.

தேச சுதந்திரம் காப்போம்! தேசத்தின் அடித்தளத்தை மாற்றி அமைப்போம்!! என்று உறுதியேற்று, அனைத்து இந்திய மக்க ளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமது புரட்சிகரமான சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.