ராமநாதபுரம், ஜூலை 24- ராமநாதபுரம் மாவட்டம் மெய்யம் புலியைச் சேர்ந்த சாத்தையா (வயது 85) ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதனன்று மதியம் காலமானார். இவர், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ் நம்புராஜனின் தந்தையாவார். சாத்தையா மறைவுச் செய்தியறிந்து சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், தலைவர்கள் டி.லெட்சுமணன், பா.ஜான்சிராணி மற்றும் ஜீவா சக்ரவர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், சங்க மாவட்ட நிர்வாகி எம். ராஜ்குமார், சிபிஎம் தாலுகாச் செயலாளர் செல்வராஜ் மற்றும் கட்சியின் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.