tamilnadu

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் விளக்கம்

சென்னை, டிச. 4 - வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தால், அந்த தேர்வுகள் ஜன வரியில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “வெள்ளம் பாதித்த 15  மாவட்டக் கல்வி அலுவலர் களோடு ஆலோசனை நடத்தி னோம். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 45 பள்ளிகளில் மழைநீர் புகுந்துள்ள நிலையில், என் னென்ன முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கவேண்டும்; மழைநீர் வடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி னோம். அனைத்துப் பள்ளிகளி லும் அரையாண்டுத் தேர்வுக் கான பணிகள் முடிவடைந்து விட்டன.

எனவே, டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த அரையாண்டு செய்முறைத் தேர்வு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப் படும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. பாதிக்கப் பட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வை நடத்த முடியாத சூழல்  ஏற்பட்டால் அந்த தேர்வுகள் ஜன வரி மாதத்தில் நடத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் பாதிக்கப்பட்டது என்பது குறித்து  ஆய்வு மேற்கொண்டு வரு கிறோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள் ளார்.