சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 14 - நலவாரிய உறுப்பினர்க ளில் சரிபாதி பேருக்கு அரசு அறிவித்த ஊரடங்கு கால நிவாரணம் கிடைக்க வில்லை என்று சிஐடியு மாநி லப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். சிஐடியு ஆயிரம் விளக்கு பகுதி ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நலவாரிய ஆன் லைன் உறுப்பினர் பதிவு மையம் அமைக்கப்பட்டுள் ளது. அந்த மையத்தில் உறுப்பினர் பதிவை வெள்ளி யன்று (ஆக 14) தொடங்கி வைத்து அவர் பேசிய தாவது: தமிழக அரசு நலவாரிய உறுப்பினர்களுக்கு அறி வித்த ஊரடங்கு கால நிவா ரணத் தொகை சரிபாதி பேருக்கு கிடைக்கவில்லை. ஊரடங்க காலத்தில் அனைத்து துறை அலுவ லகங்களும் செயல்படு கின்றன. ஆனால் நலவாரிய அலுவலகம் மட்டும் செயல் பட மறுக்கிறது. புதிதாக உறுப்பினர் பதிவு, புதுப் பித்தல், பணப்பயன் வழங்கு தல் போன்ற பணிகள் நடை பெறவில்லை.
சிஐடியு தொடர் தலை யீடு காரணமாகவே ஆன் லைன் உறுப்பினர் பதி வில் உள்ள குறைபாடுகள் ஓரளவுக்கு சரி செய்யப் பட்டுள்ளன. விண்ணப்ப படி வம் 3 முறை மாற்றப்பட்டுள் ளது. இப்படி ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன. இந்த வாய்ப்பை பயன் படுத்தி சங்கத்தை பலப்ப டுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். ஆயிரம் விளக்கு ஒருங்கி ணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ் வில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் எம்.தயாளன், எஸ்.சந்தானம், பி.சுந்தரம், எம்.பண்டியன், வி. செந்தில்குமார், ஏ.பெரிய சாமி, மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் தி.ஜெய்சங்கர், பகுதி நிர்வாகிகள் பி.ஏழுமலை, எல்.புவனேஸ்வரன், சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர் இரணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.