புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மஹே பகுதிகளைச் சார்ந்த 78 இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு, புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு, புதுச்சேரி வந்தடைந்தனர். இதையடுத்து, ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.