tamilnadu

img

மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு

சென்னை, ஆக. 14- இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐ.எம்.ஏ.) தாம்பரம் கிளை சார்பில் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐ.எம்.ஏ.) தாம்பரம் கிளையின் ஒரு அங்கமாக தாம்பரம் மகப்பேறு மருத்து வர்கள் அமைப்பு புதிதாக துவங்கப்பட்டுள்ளது.  இந்திய மருத்துவர்கள் சங்க தேசிய துணைத் தலைவர் ஜே.ஏ.ஜெயலால் மாநட்டை துவக்கி வைத்து, ‘மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்ற ங்கள் குறித்தும், மருத்து வர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகளை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் பேசினார். மகப்பேறு மருத்து வத்தில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து பெங்களூரிலிருந்து சுசீலா ராணி, ஒடிசாவிலிருந்து பி.சி.மகாபாத்ரா, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்ட மருத்துவ வல்லுனர்கள் தங்களது அனுபவங்களை யும், இக்கட்டான சூழ்நிலை யில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.  மகப்பேறு மருத்துவர்க ளாக பணியாற்றி வருபவர்கள், பி.ஜி.மருத்து வம் படித்துவரும் மாண வர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஐ.எம்.ஏ.தாம்பரம் கிளை யின் தலைவர் முருகன், செயலாளர் உமையால் முருகேசன், பொருளாளர் சரவணகுமார், கிருத்திகா தேவி, சாய்ஜெயலட்சுமி  உள்ளிட்ட மருத்துவக்குழு வினர் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர்.