சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூன் 19 முதல் 30ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி மகாபலிபுரத்தில் உள்ள வங்கி (மேல்படம்) ஒன்றில் பணம் எடுக்க மக்கள் குவிந்தனர். இதனை ஒழுங்குபடுத்த முன்வராத காவலர்கள் அதேபகுதியில் உள்ள டாஸ்மாக் (கீழ்படம்) விற்பனையை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.