tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குரூப் 4 தேர்வு : கூடுதலாக 480 காலிப் பணியிடங்கள்
அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை, செப்.12- நடைபெற்று முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலிப்பணி யிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் 108, இள நிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, பில் கலெக்டர் 66 உள்பட மாநிலம் முழுவ தும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப் பட்டிருந்தன.  இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப் பித்திருந்தனர்.

ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரூப்-4 தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வை எழுதினர். இந்த தேர்வுக் கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் அடுத்த மாதம் அக்டோபரில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

https://www.tnpsc.gov.in/English/Selection Schedule.html என்ற இணையப் பக்கத்தில் தேர்வு முடி வுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது. இந்த நிலையில், ஏற்கனவே 6,244 காலிப்பணியி டங்களில் புதிதாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன பாதுகாவலர் உள்ளிட்ட 28 வகையான பணிகளுக்கான 480 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் இந்த அறிவிப்பு தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே விபத்து:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

சிதம்பரம்,செப்.12- சிதம்பரம் வட்டம், பு.முட்லூர் அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த நக்கம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56). அவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பார்ப்ப தற்காக உறவினர்களுடன் ஒரு காரில் சென்னை சென்றார்.

சென்னையில் இருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.  வியாழக்கிழமை (செப்.12) அதிகாலை 3 மணிக்கு சிதம்பரம் அருகே பு.முட்லூர் மேம்பாலத்தின் அருகே எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது.இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கும்பகோ ணம் அருகே  கருப்பூரைச் சேர்ந்த ஓட்டுநர் யாசர் அராபத் (38), காரில் பயணம் செய்த ஹாஜிரா பேகம் (62), திருமங்க லம் கிராமத்தைச் சேர்ந்த ஹராபத்நிஷா (27), அவரது குழந்தை அப்னான் (3) உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நிகழ்ந்தவுடன் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 நாட்கள் விடுமுறை:  சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை,செப்.12- 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து செப்டம்பர் 13, 14 ஆகிய நாட்களில் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறி வித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முன்பதிவு
5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தது ரயில் டிக்கெட்

சென்னை,செப்.12- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12 காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கான அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. 

ஆதார் அட்டையை புதுப்பிக்க 
மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை,செப்.12- ஆதார் அட்டையை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரை புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை தான் கால அவகாசம் உள்ளது என்ற தகவல் பரவியது. இத னால் இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் தங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். ஆனால் இத் தகவல் உண்மையல்ல, வதந்தி என தற்போது தெரியவந்துள்ளது. அதற்கான உரிய விளக்கத்தை ஆதார் ஆணைய அதிகாரிகள் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஆதார் ஆணைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

“ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுக ளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும். சேவைகள் எதுவும் பாதிக்காது. வருகிற 14 ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற தவறான வதந்தியை சிலர் பரப்பி யுள்ளனர். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொது மக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவ ரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றத்தைப் பதிவு செய்யலாம்.

இந்த சேவைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதை பலர் தவறாக புரிந்து கொண்டு, 14 ஆம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ரத்தாகி விடும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி. 10 ஆண்டுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும், ஆதார் அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளலாம். தற்போது டிசம்பர் 14 வரைக் கும் மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.