அரசுக் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 54-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு 1,742-மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன், கல்லூரி முதல்வர் இரா.சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டல் சேப்பாக்கம் மைதானத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது காவல்துறை தகவல்
சென்னை, ஏப். 12- சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றன. சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது வெள்ளிக்கிழமை (ஏப். 11) மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு வசதிகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர் கூறுகையில், “சேப்பாக்கம் மைதானம் முழுவதும் 252 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் ரசிகர்களின் செயல்பாடுகள், மைதானத்திற்கு வெளியே மற்றும் அதனை சுற்றி நடைபெறும் செயல்களை கண்காணித்தோம். இந்த கண்காணிப்பு பணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். இதனால், சந்தேகத்துக்குள்ளான நபரின் முகம் அல்லது உடை அல்லது அதன் வண்ணத்தை வைத்தே அரங்கில் அவரின் முழு செயல்பாடுகளின் பதிவுகள் மூலம் காணொளியாக பெற முடிகிறது. இதற்கு முன்பு இந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தின் போது ஒரே நேரத்தில் 28க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் திருடு போனது. அந்த திருட்டு செயலில் ஈடுபட்ட கும்பலை விரைந்து கண்டுபிடிக்கவும் இந்த தொழில்நுட்பம் தான் உதவியாக இருந்தது. இன்னும் ஒரு கும்பலையும் ஓரிரு நாட்களில் கைது செய்வோம். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கடந்த சில ஆட்டங்களில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது”என்றனர்.
மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப்.12- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய கொண்டு வருவதா?என்று கேள்வி எழுப்பினர்
பைக் திருடிய சிறுவன் கைது
சென்னை, ஏப்.12- சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடிய 17 வயது சிறுவன் கைது செய்யபட்டார். Honda Dio ஸ்கூட்டர்களை குறிவைத்து அதிக அளவில் திருடியது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. மேலும் கவியரசன் (20) என்பவருடன் சேர்ந்து 150க்கும் மேற்பட்ட பைக்குகளையும் திருடி உள்ளார்.
கார் மோதி காவலாளி பலி
அம்பத்தூர், ஏப். 12 - பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (47). இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற ஏழுமலை மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த செம்பரம்பாக்கம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போகும் படி செய்தனர். இதையடுத்து இறந்து போன ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம விலங்கு கடித்து 5 கன்று குட்டிகள் பலி
ஊத்தங்கரை வட்டம், திருவணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் வேடி யப்பன், ராஜாமணி இருவரும் 20 ஆண்டு களாக கால்நடைகள் வளர்த்து வருகின்ற னர். தற்போது 10 மாடுகள் 5 கன்று குட்டிகள் வளர்த்து வருகின்றனர். மேய்ச்சலை முடித்து மாட்டு கொட்டகை யில் மாடுகள்,கன்று குட்டிகளும் அடைத்து வைத்தனர். நள்ளிரவு கன்று குட்டிகள் அலறல் சத்தம் கேட்டு மாடுகள் கட்டி யிருந்த இடத்தில் சென்று பார்த்த போது வயிறு,காது, கழுத்து உள்ளிட்ட பகுதி களில் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத் தில் 5 கன்றுகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே காவல்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் கிராம நிர்வாக அலுவலர் இளம் பருதி, கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர். என்ன விலங்கு கடித்தது என இதுவரை தெரிய வில்லை. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும், கன்றுக்குட்டிகள் இறந்த தற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.