சென்னை, ஆக. 17 - அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாண வர்கள் கல்வி செலவீனங்களை, படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் அல்லது போக்கு வரத்துக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்ட ணங்களையும் அரசே வழங்கும் என அர சாணை (நிலை) எண்:221 உயர்கல்வித்துறை நாள்: 15.11.2021-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகள்
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந் தாய்வு மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படும் என அரசாணை (நிலை) எண்:85 உயர்கல்வித்துறை நாள்: 16.4.2010-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் - பழங்குடியினர்
அதேபோல சுயநிதிக் கல்வி நிறுவனங்க ளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச மற்றும் கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய மாணவர்கள்- பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் உள்ளவர்களுக்கு கட்டாய, திருப்பிச் செலுத்தப்படாத அனைத்துக் கல்வி கட்டணங்களும் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது என்று அரசாணை (நிலை) எண்:6 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந3) துறை நாள்: 9.1.2012 மற்றும் அரசாணை (நிலை) எண்:51 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை நாள்: 7.8.2013-இன் படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விதிகளை மீறும் கல்லூரிகள்
இருப்பினும் அரசின் மேற்படி ஆணை களை மீறி சில பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வின் வழி அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவர்களிடமிருந்து அனைத்து கட்ட ணங்களையும் செலுத்த வற்புறுத்துவதாக புகார்கள் பெறப்படுகின்றன.
எனவே, அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் மேற்கண்ட அர சாணையின் பயனாளிகளிடமிருந்து கட்ட ணங்களை பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வசூலிக்கக் கூடாது என கண்டிப்பாக தெரி வித்துக் கொள்ளப்படுகிறது. இதனை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்கூட்டியே வசூலிக்கக் கூடாது
மேலும் அக்கட்டணங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின், மாணவர்கள் அக்கட்ட ணங்களை அவர்கள் பயிலும் கல்லூரிகள் செலுத்த வேண்டும். அவ்வாறு மாண வர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் முன்னர் மேற்படி இட ஒதுக்கீட்டில் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்த வித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை, தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தமது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.