சென்னை, டிச.6- விரைவில் 100 விளையாட்டு வீரர் - வீராங் கனைகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள மைதானத்தில் தமிழக இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் 288 ஊராட்சிகளின் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகர ணங்கள் வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர் - வீராங்க னைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், யாஷினி இரண்டு பேருக்கு துணை முதல்வர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் 68 ஆவது நினைவு தினத்தையொட்டி மேடையில் அமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினார்.
பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது போல 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், பெண்கள் சுயமரியாதையுடன் வாழ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இது வரை ரூ.92 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப் பட்டு உள்ளது என்றார்.