சென்னை, ஆக. 17 - தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் அளவிற்கும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதுமாகவும் மின்சாரத்தை இலவச மாக வழங்கி வருகிறது. இதற்காக, மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.
அதன்படி, இந்த நிதியாண்டுக்கு ரூ. 15,332 கோடி மானியம் வழங்க அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்க னவே உத்தரவிட்டிருந்தது. இதில், வீடு களுக்கு ரூ. 7 ஆயிரத்து 225 கோடியும், விவ சாயத்திற்கு ரூ. 6 ஆயிரத்து 780 கோடியும் மானியமாக வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்துப் பிரிவுகளுக்கும் மின்கட்டணம் 4.83 விழுக்காடு உயர்த்தப் பட்டது. ஒரு யூனிட்டுக்கு 20 முதல் 55 காசு வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மானியத் செலவும் உயர்ந்தது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டுக்கு கூடுதலாக ரூ. 519 கோடியே 25 லட்சத்தை மின்வாரியத்துக்கு வழங்குமாறு அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்த ரவிட்டுள்ளது.