சென்னை, ஆக. 24 - போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 27 அன்று நடைபெற உள்ள நிலை யில், அதில் பங்கேற்குமாறு தொழிற் சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வரு கின்றனர்.
இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுக ளுக்கு ஒரு முறை நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி யுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்க ளுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று 14- ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி, அடிப்ப டை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் எனவும் அறி விக்கப்பட்டது. அந்த 14-ஆவது ஊதிய ஒப் பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் காலாவதியானது. எனவே, 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, வேலை நிறுத் தம் உள்ளிட்ட பல்வேறு நடவ டிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன.
இதுதொடர்பாக தொழிலாளர் துறையின் முன்னிலையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஆகஸ்ட் 27 அன்று காலை 11 மணிக்கு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடைபெறும் என போக்குவரத்துக் கழக நிர்வா கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையம் வளாகத்தில் முதற் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.