tamilnadu

img

ஆளுநர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்து ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

சென்னை, ஆக.13- சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள் ளன.

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கொண்டா டப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்களுக்கு, ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அதன்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் மாளிகை சார்பில் தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அவர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக, 

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, விசிக உள்ளிட்ட திமுக தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

ஆளுநர் ரவியின் அழைப்பை நிராகரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை விடுத்துள்ள அறிக்கை யில், “ஆளுநர் அழைப்புக்கு நன்றி. ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களா ட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படு கின்றன. மேலும், ஆளுநர் பதவிக் காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அர சமைப்புக்கு எதிரானது. எனவே, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கி றோம்” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், “அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்வு பிரமுகர் களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். 

அதன்படி, ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அவர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார். இந்த நிலை யில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக் கணிக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல். திருமாவளவன், “ஆளுநரின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகள் காரணமாக தேநீர் விருந்து நிகழ்வை புறக்கணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

“கூட்டாட்சியை  அரசிய லமைப்பை மதிக்க்காத ஆணவப்போக்கு கொண்ட ஆர்.என். ரவி, ஆளுநர் பதவியில் நீடிப்பதே இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. சிபிஐ(எம்) அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறது” என்று கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.