tamilnadu

என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம்

சென்னை, அக். 31 - விடுதலைப் போராட்ட வீரர் என். சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்ட மளிக்க ஒப்புதல் வழங்க மறுத்துள்ள தமிழ்நாடு ஆளுநர், தனது முடிவை மறுபரி சீலனை செய்ய வேண்டுமென்று கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு கேட்டுக்  கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சோ.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விடுதலைப் போராட்டக் காலத்தில் 5 ஆண்டுகள், சுதந்திர இந்தியாவில் எளிய மக்கள் வாழ்வு ஏற்றமுற 4 ஆண்டுகள் என  சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் என். சங்கரய்யா. விடுதலை வேட்கையின் காரணமாக வகுப்பை புறக்கணித்தால், தேர்வுவெழுத முடியாமல், பட்டப் படிப்பை தொடர முடியாத சூழலுக்கு உள்ளான வர்.

இளைஞர்களின் போற்றத்தக்க முன் மாதிரியாக திகழும் நூற்றாண்டுகளைக்  கடந்த மகத்தான சுதந்திரப் போராட்ட  தியாகிக்கு  கௌரவ டாக்டர் பட்டம் வழங்க  தமிழ்நாடு முதல்வர் பரிந்துரைத்தார். அதனடிப்படையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சனநாயக அமைப்பு களான செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவை ஒருமனதாக, கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது. அதில், ஆளுநர் கையெழுத்திட மறுத்திருப்பது வருந்தத்தக்கது.

80 ஆண்டுகளாக சாதாரண ஏழை, எளிய மக்களின் துயரைப் போக்க ஓயாத குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வரலாற்றில் ஒரு நீங்கா புகழை நிச்சயம் பெறும். எனவே, தமிழக ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.