tamilnadu

img

பச்சையப்பன் கல்லூரிகளை அரசே ஏற்க வேண்டும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.8- பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர் தேர்தலை உடனடியாக  நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக  ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சங்க தமிழ்நாடு துணை தலைவர் பசுபதி கூறியதாவது: பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 6  உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வரு கின்றன.

அறக்கட்டளைக்கு அறங் காவலர் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த  2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. புதிய அறங்காவலர் குழு தேர்வு செய்யப்படும் வரை நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதியை இடைக்கால நிர்வாகியாக நியமித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அறங்காவலர் தேர்தல் நடத்தப்படவில்லை.

 செயலாளர் பதவியில் இருக்கும் துரைகண்ணுவின் பணிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆனால்,  விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயலாளர் பொறுப்பை அவர் கவனித்து வருகிறார். இத்தகைய சூழலில் புதிதாக 132 உதவி பேராசிரியர்களை நியமிப் பதற்கான முயற்சியில் இடைக்கால நிர்வாகம் இறங்கியுள்ளது. அறங்காவ லர் குழு தான் பேராசிரியர்களை நிய மிக்க முடியும். இடைக்கால நிர்வாகத் துக்கு அதற்கான அதிகாரம் கிடை யாது.  

அறங்காவலர் தேர்தல் நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தால் 20 நாட்களில் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்தி புதிய அறங்காவலர்கள் தேர்வு செய்ய முடியும். செயலாளர் பதவியில் இருக்கும் துரைக்கண்ணு வால் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரு கின்றனர். பேராசிரியைகள் அவமரியா தைக்கு உள்ளாகின்றனர். கல்லூரி கல்வி இயக்குநர் பிறப்பிக்கும் எந்த  உத்தரவையும் செயலர் கண்டுகொள் வதே இல்லை. விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே, தமிழ்நாடு தனியார் கல்லூரி களின் ஒழுங்கு முறை சட்டத்தை பயன் படுத்தி தமிழக அரசு பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை தன் வசம்  எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய இடைக்கால நிர்வாகத் தின் முறைகேடுகள் காரணமாக, இந்த  அறக்கட்டளை எதற்காக ஏற்படுத்தப் பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.