tamilnadu

img

12 ஆண்டுகளாக அங்கன்வாடி மையத்தில் இயங்கும் அரசுப் பள்ளி

வேப்பூர் அருகே 12 ஆண்டு களாக அங்கன்வாடி மையத்தில் இயங்கும்  அரசு ஆதி திராவிட தொடக்கப் பள்ளிக்கு புதிய  பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்  டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அரு கிலுள்ள சிறுநெசலூர் கிராமத்தில் சென்னை - திருச்சி செல்லும் தேசிய  நெடுஞ்சாலை ஓரத்தில் 1963 முதல்  இயங்கி வந்தது அரசு ஆதி திராவிட தொடக்கப்பள்ளி. 2007ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது அந்த பள்ளிக்  கட்டிடம் இடிக்கப்பட்டது.  ஊருக்கு  எதிரே உள்ள பள்ளிக்கு செல்ல வழி  இல்லாததாலும், தேசிய நெடுஞ் சாலையை கடந்து பள்ளிக்குச் செல்  லும் போது சாலை விபத்து ஏற்பட்டு  குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்ற காரணத்தினாலும், 2 கிலோ மீட்டர் சுற்றி குழந்தைகள் கல்வி கற்கச்  செல்ல வேண்டிய நிலை ஏற்  பட்டதால், அந்த கிராம மக்கள் தங்க ளுடைய குழந்தைகளை பள்ளிக்கு  அனுப்ப மறுத்து விட்டனர்.  தாங்கள்  வசிக்கும் சிறுநெசலூர் கிராமத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டித் தந்தால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்போம் என்ற  கோரிக்கையுடன் கிராம மக்கள் பல  கட்ட போராட்டங்களை நடத்தினர். பின்னர் 2007ஆம் ஆண்டு ஜுன்  மாதத்தில் அப்போதைய விருத்தாச லம் கோட்டாட்சியர் மற்றும் கட லூர் மாவட்ட ஆட்சியர் புதிய பள்ளிக்  கூடம் கட்டித் தர ஒப்புதல் அளித்த னர்.  புதிய பள்ளிக்கூடம் கட்டும் வரை  தற்காலிகமாக சிறுநெசலூர் கிரா மத்தில் உள்ள அங்கன்வாடி மையத்  தில் ஆதி திராவிட தொடக்கப் பள்ளி  இயங்கட்டும் என்று கூறியதை யடுத்து, கிராம மக்கள் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பி வைத் துள்ளனர்.

பல வருடங்கள் கடந்தும் அரசு  புதிய பள்ளிக்கூடம் கட்டித் தராத தால் சிறுநெசலூர் மக்கள் ஒன்று  சேர்ந்து கோட்டாட்சியர், வட்டாட்சி யர், மாவட்ட ஆட்சியர்களிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம், சாலை மறியல் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தியும் புதிய கட்டடம் கட்டப்படவில்லை. அந்த கிராமத்தில் உள்ள இந்து  அறநிலையத் துறைக்கு சொந்த மான இடத்தை தேர்வு செய்து, புதிய  பள்ளிக்கூடம் கட்ட அரசு நிதி ஒதுக்கி யுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ஆனால் இதுவரை  புதிய பள்ளிக்கூடம் கட்ட எந்த நட வடிக்கையும் மேற்கொள்ள வில்லை.  கடந்த 12 ஆண்டுகளாக அங்கன்  வாடி மையத்தில்தான் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இடநெருக்கடியால் மாணவர்களும், ஆசிரியர்களும் தவித்து வருகின்ற னர். இப்பள்ளியில் பயிலும் மாண வர்களுக்கு முறையான குடிநீர், கழிவறை வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அருகிலுள்ள வீடுகளில் குடிநீர் வாங்கி வந்து மாணவர்களுக்கு தருவதாகக் கூறுகின்றனர்.

போதுமான வகுப்பறை வசதி யின்றி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம்  வகுப்பு வரை அனைத்து மாணவர்க ளும் ஒரே அறையில் வைத்து பாடம் நடத்துகின்றனர். அந்த பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மிகவும் சிர மப்படுவதாகவும், சரியான முறை யில் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர முடியாமல் தவித்து வருவதாகவும் கூறுகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு முன்பு 30க்கும் மேற்பட்ட குழந்தை கள் வந்த நிலையில் தற்போது இடப்பற்றாக் குறையால் குழந்தை களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ஓடி ஆடி விளையாடி மகிழ வேண்டிய மழலைகள் கட்டிப்போட்ட மாதிரி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்றும் அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைக்க சமையற் கூட மின்றி பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே சுகாதாரமற்ற முறையில் உணவு சமைக்கப்படுகிறது. அரசு ஆதிதிராவிட தொடக்கப் பள்ளி யானது பழைய கட்டிடத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இயங்கிய போது 200க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வந்தனர். தற்போது  தனியாக கட்டிடம் இல்லாததாலும்,  அடிப்படை வசதிகள் இல்லாததா லும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாகவும், இதனால் வேப்பூர், கழுதூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அரசு உடனடியாக அடிப்படை  வசதிகளுடன் கூடிய  புதிய பள்ளிக் கூடம் கட்டித் தர வேண்டுமென்றும், இல்லையெனில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தி வரும் தமிழக அரசு, பள்ளி வேண்டும் என்று போராடிவரும் சிறு நெசலூர் மாணவர்களின், கிராம மக்களின் கோரிக்கையை நிறை வேற்றுமா?